2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கைவிடப்பட்டது ஆப்கான் - எம்.சி.சி போட்டி

Editorial   / 2017 ஜூலை 13 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் அணிக்கும் மரிலிபோன் கிரிக்கெட் கழகத்துக்கும் (எம்.சி.சி) இடையிலான கிரிக்கெட் போட்டி, மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.

லோர்ட்ஸில் இடம்பெற்ற இப்போட்டியில், மழை பாதிக்க, முதலில் துடுப்பெடுத்தாடிய எம்.சி.சி அணி, 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது. சாம் ஹெய்ன் 76 (100), சமித் பட்டேல் 53 (47) ஓட்டங்களைப் பெற்றனர். ஷபூர் ஸட்ரன் 3, குல்படின் நைப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 31 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது, மழை குறுக்கிட்டது. அதன் பின்னர், போட்டியை ஆரம்பிக்க முடியாமல் போனது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .