2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கோலி, டோணி உள்ளிட்டோருக்கு ஓய்வு

Editorial   / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் பங்கேற்கவுள்ள முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்தியக் குழாமில், அணித்தலைவர் விராத் கோலி, விக்கெட் காப்பாளர் மகேந்திர சிங் டோணி, வேகப்பந்துவீச்சாளர் புவ்னேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, சகலதுறை வீரர் ஹர்டிக் பாண்டியா, சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறவில்லை இவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஓய்வளிக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக, வொஷிங்டன் சுந்தர், விஜய் ஷங்கர், மொஹமட் சிராஜ், தீபக் ஹூடா, றிஷப் பண்ட் ஆகியோர் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதோடு, அணித்தலைவராக ரோகித் ஷர்மா செயற்படவுள்ளதுடன், உப அணித்தலைவராக ஷீகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

குழாம்: ரோகித் ஷர்மா (அணித்தலைவர்), ஷீகர் தவான், லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், அக்ஸர் பட்டேல், விஜய் ஷங்கர், ஷர்டுல் தாக்கூர், ஜெய்டேவ் உனத்கட், மொஹமட் சிராஜ், றிஷப் பண்ட்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .