2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

செப்டெம்பரில் எஞ்சிய இவ்வாண்டு ஐ.பி.எல்?

Shanmugan Murugavel   / 2021 மே 05 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இவ்வாண்டுப் போட்டிகளில் 60-இல் இதுவரை 29 போட்டிகள் விளையாடப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 31 போட்டிகளை இவ்வாண்டு செப்டெம்பரில் விளையாடுவது குறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆராய்கிறது.

செப்டெம்பரில் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான தொடர் முடிவடைந்து விடுமென்பதுடன், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கு வெளிநாட்டு வீரர்கள் தயாராகி விடுவர் என்ற நிலையிலேயே செப்டெம்பர் கருத்திற் கொள்ளப்படுவதாக, ஐ.பி.எல் அணி அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செப்டெம்பரில் சாத்தியமாவென ஆராய வேண்டுமெனத் தெரிவித்துள்ள ஐ.பி.எல் தலைவர் பிறிஜேஷ் பட்டேல், சர்வதேச கிரிக்கெட் சபையுடனும், ஏனைய கிரிக்கெட் சபைகளுடனும் திட்டங்களை ஆராய வேண்டுமெனக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X