2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சமநிலையில் ஜுவென்டஸ்-ஸஸுல்லோ போட்டி

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஸஸுல்லோவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் முடித்துக் கொண்டிருந்தது.

ஜுவென்டஸ் சார்பாக, லியனார்டோ பொனுச்சு, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சஸுல்லோ சார்பாக, ஜெரெமி பொகா, ஃபிரான்ஸெஸ்கோ கபுட்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற பொலொக்னாவுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நாப்போலி தோற்றிருந்தது. நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஃபெர்ணான்டோ லொரன்டே பெற்றிருந்தார். பொலொக்னா சார்பாக, அன்ட்ரயாஸ் ஸ்கொவ் ஒல்சென், நிக்கொலா சன்சொனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற எஸ்.பி.ஏ.எல்லுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது. இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் லொட்டரோ மார்ட்டின்ஸ் பெற்றிருந்தார். எஸ்.பி.ஏ.எல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மத்தியா வலோட்டி பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற உடினிஸுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் லேஸியோ வென்றிருந்தது. லேஸியோ சார்பாக, சிரோ இம்மொபைல் இரண்டு கோல்களையும், லூயிஸ் அல்பேர்ட்டோ ஒரு கோலையும் பெற்றனர்.

இந்நிலையில், ஹெலாஸ் வெரோனாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் றோமா வென்றிருந்தது. றோமா சார்பாக, ஜஸ்டின் குளுய்வேர்ட், டியகோ பெரோட்டி, ஹென்றிக் மிகித்திரயான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஹெலாஸ் வெரோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை டேவிடே ஃபரரோனி பெற்றிருந்தார்.

இதேவேளை, பர்மாவின் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் தியோ ஹெர்ணான்டஸ் பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் வென்றது.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 37 புள்ளிகளுடன் முதலிடத்தில் இன்டர் மிலன் காணப்படுகிறது. 36 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஜுவென்டஸும், 30 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லேஸியோவும், 28 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் றோமாவும் காணப்படுகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .