2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சம்பியனானார் செரீனா

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தின் ஒக்லன்டில் நடைபெற்றுவந்த ஒக்லன்ட் பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் சம்பியனாகியுள்ளார்.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சக ஐக்கிய அமெரிக்க வீராங்கனையான ஜெஸிக்கா பெகுலாவை வென்றே ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சம்பியனாகியிருந்தார்.

இப்போட்டியின் முதலாவது செட்டில் 1-3 என செரீனா வில்லியம்ஸ் பின்தங்கியிருந்த போதும் சுதாகரித்துக் கொண்டு 6-3 என முதலாவது செட்டைக் கைப்பற்றியதுடன், 6-4 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றி நேர் செட்களில் சம்பியனானார்.

செரீனா வில்லியம்ஸ், தனது அரையிறுதிப் போட்டியில், 6-1, 6-1 என்ற நேர் செட்களில் இன்னொரு ஐக்கிய அமெரிக்க வீராங்கனையான அமன்டா அனிசிமோவாவை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்த நிலையில், 3-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கியை வென்று இறுதிப் போட்டிக்கு ஜெஸிக்கா பெகுலா தகுதிபெற்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X