2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சம்பியனானார் நடால்

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொன்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால் சம்பியனானார்.

16 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் சம்பியான ரபேல் நடால், 6-3, 6-2 என்ற நேர் செட்களில், ஜப்பானின் கீ நிஷிகோரியை நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வென்றே சம்பியனானார்.

இத்தொடரில் சம்பினாகுவதன் மூலமே, தரவரிசையில் இரண்டாமிடத்திலுள்ள சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரிடமிருந்து தனது முதலிடத்தை தக்க வைக்க முடியெமென்ற நிலையில், இம்முறையுடன் 11ஆவது முறையாக இத்தொடரில் சம்பியனாகி தனது முதலிடத்தை ரபேல் நடால் தக்க வைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .