2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியனானார் பெற்றா குவிற்றோவா

Editorial   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டார் பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் தற்போதைய 10ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெற்றா குவிட்டோவா சம்பியனானார்.

இறுதிப் போட்டியில், உலகின் தற்போதைய மூன்றாம் நிலை வீராங்கனையான ஸ்பெய்னின் கர்பைன் முகுருஸாவை எதிர்கொண்ட பெற்றா குவிட்டோவா, முதலாவது செட்டை 3-6 என இழந்தபோதும் அடுத்த இரண்டு செட்களையும் 6-3, 6-4 எனக் கைப்பற்றி வென்று சம்பியனாகினார்.

அந்தவகையில், சென். பீற்றர்ஸ்பேர்க்கில் கடந்த இரண்டு கிழமைகளுக்கு சம்பியானதுடன் இத்தொடரிலும் சம்பியனாகியிருந்த நிலையிலேயே நேற்று வெளியிடப்பட்ட தரவரிசையில் 11 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்துக்கு வந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .