2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சூதாட்டமென சந்தேகம்: இருவர் கைதாகினர்

Editorial   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான மஸான்ஸி சுப்பர் லீக்கில், டேர்பனில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற டேர்பன் ஹீட், ஜோஸி ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின்போது சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்பின்னர், அனுமதியற்ற விதத்தில் உள்நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட குறித்த பிரித்தானியப் பிரஜைகள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இதேவேளை இத்தொடரின் ஆரம்பத்திலும் பார்ள் றொக்ஸ், தஷவானே ஸ்பார்ட்டன் அணிகளுக்கிடையே கடந்த மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற போட்டியிலும் இவ்வாறு இருவர் கைதாகியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .