2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

செவில்லாவை வென்று சம்பியனானது பார்சிலோனா

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கோப்பா டெல் ரே தொடரில் பார்சிலோனா சம்பியனானது. இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற செவில்லாவுடனான இறுதிப் போட்டியில் வென்றே பார்சிலோனா சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியின் 14ஆவது நிமிடத்தில். பார்சிலோனாவின் பிலிப் கோச்சினோ சக வீரர் லூயிஸ் சுவாரஸிடமிடம் கொடுத்த பந்தை கோலாக்க பார்சிலோனா முன்னிலை பெற்றது. தொடர்ந்த ஆட்டத்தில், செவில்லாவின் ஜோச்சின் கொரேரா கோல் பெறும் நல்ல வாய்ப்பொன்றைத் தவறவிட்டதுடன், அவரின் சக வீரர் சன்ட்ரோ றமாரிஸ் உதைத்த பந்தொன்று நேரடியாக பார்சிலோனாவின் கோல் காப்பாளரான ஜஸ்பர் சில்ஸனிடம் சென்றிருந்தது.

இதையடுத்து, போட்டியின் 31ஆவது நிமிடத்தில் தமதணியின் ஜோர்டி அல்பா கொடுத்த அருமையான பந்துப் பரிமாற்றத்தை லியனல் மெஸ்ஸி கோலாக்க தமது முன்னிலையை பார்சிலோனா இரட்டிப்பாக்கிக் கொண்டது. தொடர்ந்த முதற்பாதி ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்தில் லியனல் மெஸ்ஸி கொடுத்த பந்தை லூயிஸ் சுவாரஸ் கோலாக்க முதற்பாதி முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா முன்னிலை பெற்றுக் காணப்பட்டது.

பின்னர் இரண்டாவது பாதி ஆரம்பித்த ஏழாவது நிமிடத்தில், தமது அணியின் தலைவர் அன்றேஸ் இனியஸ்டா பெற்ற கோலுடன் 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற பார்சிலோனா, போட்டியின் 69ஆவது நிமிடத்தில் கிடைக்கப் பெற்ற பெனால்டியை பிலிப் கோச்சினியோ கோலாக்கியதுடன் 5-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் வெற்றிபெற்று இம்முறையுடன் 30ஆவது தடவையாக கோப்பா டெல் ரே தொடரில் சம்பியனாகிக் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X