2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

டேவிஸ் கிண்ண அரையிறுதியில் ஸ்பெய்ன்

Editorial   / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஜேர்மனி தகுதிபெற்றுள்ளது.

ஜேர்மனியுடனான காலிறுதிப் போட்டியின் நேற்றைய இறுதி நாள் ஆட்டத்தில் 1-2 என்றவாறு பின்தங்கியிருந்த ஸ்பெய்ன், உலகின் முதல்நிலை வீரரான ரபேல் நடால் மற்றும் டேவிட் பெரர் ஆகியோர் தத்தமது தனிநபர் போட்டிகளை வென்றமையத் தொடர்ந்தே 3-2 என்ற ரீதியில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

ரபேல் நடால், 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் உலகின் நான்காம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வைத் தோற்கடித்ததுடன், தீர்க்கமான போட்டியில், 7-6 (7-1), 3-6, 7-6 (7-4), 4-6, 7-5 என்ற செட் கணக்கில் பிலிப் கொஷ்னைடரை டேவிட் பெரர் வென்றிருந்தார்.

முதல் நாளில், 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் டேவிட் பெரரை அலெக்ஸான்டர் ஸவ்ரேவ் வென்றதுடன், 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் பிலிப் கொஷ்னைடரை ரபேல் நடால் வென்றதுடன், ஸ்பெய்னின் பெலிசியானோ லொபேஸ், மார்க் லொபேஸ் ஜோடி, 3-6, 4-6, 6-3, 7-6 (7-4), 5-7 என்ற செட் கணக்கில் ஜேர்மனியின் டிம் புயேட்ஸ், ஜான்-லென்னார்ட் ஸ்ரவ் ஜோடியிடம் தோல்வியடைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .