2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தலைமை தாங்கத் தயார்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தலைமை தாங்கத் தயாராக இருப்பதாக, தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஃபப் டு பிளெஸி தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க டெஸ்ட், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளின் அணித்தலைவராக, ஃபப் டு பிளெஸி செயற்பட்டு வருகிறார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் தலைவர் ஏபி டி வில்லியர்ஸ், அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அப்பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பதவியை வகிக்கக் கூடிய அதிக வாய்ப்புள்ளவர்களில் ஒருவராக, ஃபப் டு பிளெஸி கருதப்படுகிறார்.

இந்நிலையிலேயே, 3 வகையான போட்டிகளிலும் தலைவராகச் செயற்படத் தயாராக இருப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தலைவராகச் செயற்படும் போது, தனது உச்சபட்ச திறமை வெளிப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X