2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தாய்மார்களுக்கு மேலதிக தரவரிசை பாதுகாப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 14 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த பருவகாலத்திலிருந்து, டென்னிஸுக்கு திரும்பும் தாய்மார்களுக்கு, பெண்கள் டென்னிஸ் சங்க தரவரிசையில் அதிகரித்த பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

அதன்படி, குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் அல்லது காயத்திலிருந்து மீள வரும் வீராங்கனைகள், மூன்றாண்டு காலத்தில் 12 தொடர்களில் நுழைவதற்கு தங்களது முன்னைய தரவரிசை நிலையைப் பயன்படுத்தலாம்.

இந்நிலையில், பழைய தரிவரிசையில் நிலையின்படியே தொடர்களுக்கு தரப்படுத்தப்பட வேண்டும் என்ற 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற செரினா வில்லியம்ஸின் விருப்பம் நிறைவேற்றப்படாதபோதும் அவர்கள் தரப்படுத்தப்படும் வீராங்கனையை தொடரின் ஆரம்ப சுற்றில் சந்திக்கமாட்டார்கள் என்ற உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .