2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நான்காவது சுற்றில் சிலிச், ஸ்விட்டோலினா

Editorial   / 2018 மார்ச் 26 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்ற உலகின் மூன்றாம் நிலை வீரரான மரின் சிலிச், நான்காம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்லோலினா ஆகியோர் நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

குரோஷியாவின் மரின் சிலிச், 7-5, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் கனடாவின் வஸேக் பொஸ்பிஸில்லை வென்றார்.

உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, 4-6, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் அவுஸ்திரேலியாவின் டரியா கவ்ரிலோவாவை வென்றார்.

இதேவேளை, உலகின் நான்காம் நிலை வீரரான பல்கேரியாவின் கிறிகர் டிமிட்ரோட், தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜெரெமி சார்டியிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், உலகின் ஆறாம் நிலை வீரரான, ஜுவான் மார்ட்டின் டெல் போத்ரோ, தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கீ நிஷிகோரியை வென்று நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X