2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாப்போலி, ஜூவென்டஸ், றோமா வென்றன

Editorial   / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் நாப்போலி, ஜூவென்டஸ், றோமா ஆகிய அணிகள் வென்றன.

நாப்போலி, 2-0 என்ற கோல் கணக்கில் பெனெவென்டோ அணியை வென்றது. நாப்போலி சார்பாக, ட்ரைஸ் மேர்ட்டன்ஸ், மரெக் ஹம்சிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

ஜூவென்டஸ், 7-0 என்ற கோல் கணக்கில் சஸுலோ அணியை வென்றது. ஜூவென்டஸ் சார்பாக, கொன்ஸலோ ஹியூகைன் மூன்று கோல்களையும் சமி கெதீரா இரண்டு கோல்களையும் அலெக்ஸ் ஸான்ட்ரோ, மிரலெம் பிஜானிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

றோமா, 1-0 என்ற கோல் கணக்கில் ஹெலாஸ் வெரோனா அணியை வென்றது. றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை சென்கிஸ் அன்டர் பெற்றிருந்தார்.

ஏ.சி மிலன், உடினீஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X