2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாளை ஆரம்பிக்கின்றது ஒ.நா.ச.போ தொடர்

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர், புலவாயவோவில் இலங்கை நேரப்படி நாளை  மதியம் 12.45க்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருக்கும் பாகிஸ்தான், 4-1 அல்லது 5-0 என இத்தொடரை வென்றாலே ஐந்தாமிடத்தை தக்க வைக்க முடியும். மாறாக 3-2 என வென்றாலோ அல்லது 2-3 என தோற்றாலோஆறாமிடத்துக்கு கீழிறங்கும் என்பதுடன் 1-4, 0-5 என தோற்றால் ஏழாமிடத்துக்கு கீழிறங்கும்.

11ஆம் இடத்திலிருக்கும் சிம்பாப்வே 4-1 அல்லது 5-0 என தொடரை வென்றால் 10ஆம் இடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .