2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘பங்களாதேஷுக்கு தலைமை தாங்க வாய்ப்பில்லை’

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 24 , மு.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்காலத்தில் பங்களாதேஷுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பில்லை என அவ்வணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்டவீரர் முஷ்பிக்கூர் ரஹீம் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பங்கபந்து இருபதுக்கு – 20 கிண்ணத் தொடரில் பெக்ஸிம்கோ டாக்கா அணிக்குத் தலைமை தாங்கியதையடுத்து ரஹீம் தேவைப்பட்டால் பங்களாதேஷுக்குத் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

முன்னதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஜனாதிபதிக் கிண்ணத் தொடரில் தனதணிக்கு தலைமை தாங்க ரஹீம் மறுத்திருந்ததை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நஸ்முல் ஹஸன் உறுதிப்படுத்தியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .