2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பயிற்சிப் போட்டி இரத்து

Editorial   / 2017 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் வைத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபற்றுவதற்காக அங்கு சென்றுள்ள அவுஸ்திரேலிய, தொடருக்கு முன்பாக விளையாடவிருந்த பயிற்சிப் போட்டியை இரத்துச் செய்துள்ளது. மோசமான வானிலை காரணமாக, மைதானம் தயாராக இல்லாத காரணத்தாலேயே, இந்தப் பயிற்சிப் போட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

பதுல்லாவில் இடம்பெறவிருந்த இப்போட்டி, இன்று ஆரம்பிக்கவிருந்தது. ஆனால், கடுமையான மழை காரணமாக, மைதானத்தில் நீர் தேங்கிக் காணப்படுவதோடு, விளையாட முடியாத நிலை காணப்படுகிறது.

ஏற்கெனவே, ஒப்பந்தப் பிரச்சினை காரணமாக, போட்டிகளில் பங்குபற்றாமலிருந்த அவுஸ்திரேலிய வீரர்கள், தற்போது பயிற்சிப் போட்டியையும் இழந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .