2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா: இ-20 ச.போ தொடர் இன்று ஆரம்பிக்கிறது

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, லாகூரில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

பாகிஸ்தானில் தொடர் நடைபெறுகின்றமை காரணமாகவும், தென்னாபிரிக்காவின் முதன்மை வீரர்கள் அவுஸ்திரேலியத் தொடருக்கான ஏற்கெனவேயான ஏற்பாடுகளால் தென்னாபிரிக்கா சென்றுள்ள நிலையில், தொடரின் தெளிவான வெற்றிபெறக்கூடியவர்களாக பாகிஸ்தானே தென்படுகிறது.

இந்நிலையில், இவ்வாண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு அணிகளும் தமது வீரர்களைச் சோதிப்பதற்கான களமாக இத்தொடர் காணப்படுகின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில், நான்காமிடத்தில் பாகிஸ்தானும், ஐந்தாமிடத்தில் தென்னாபிரிக்காவும் காணப்படுகின்ற நிலையில், தென்னாபிரிக்காவை பாகிஸ்தான் வெள்ளையடித்தால், ஆறாமிடத்துக்கு தென்னாபிரிக்கா கீழிறங்கும். மாறாக பாகிஸ்தானை தென்னாபிரிக்கா வெள்ளையடித்தால், நான்காமிடத்துக்கு தென்னாபிரிக்கா முன்னேறுவதோடு, ஐந்தாமிடத்துக்கு பாகிஸ்தான் கீழிறங்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X