2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பார்சிலோனா குறித்து அத்லெட்டிகோ முறைப்பாடு

Editorial   / 2017 டிசெம்பர் 20 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது முன்கள வீரரான அன்டோனி கிறீஸ்மனுக்காக மேற்கொள்ளப்பட்ட சட்டரீதியற்ற அணுகல் தொடர்பாக ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிலோ மட்ரிட் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திடம் இன்னொரு லா லிகா கழகமான பார்சிலோனா குறித்து முறையிட்டுள்ளது.

பிரான்ஸ் தேசிய கால்பந்தாட்ட அணியினதும் முன்கள வீரருமான அன்டோனி கிறீஸ்மன், அத்லெட்டிகோ மட்ரிட்டுடன் 2021-22 பருவகாலம் வரை தொடரும் புதிய ஒப்பந்தத்தில் இவ்வாண்டு ஆரம்பத்தில் கைச்சாத்திட்டிருந்தார்.

இந்நிலையில், 26 வயதான அன்டோனி கிறீஸ்மன்னின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்கலாக, அன்டோனி கிறீஸ்மனைச் சுற்றியுள்ளவர்களுடன் பார்சிலோனா கதைத்ததாகவே முறைப்பாட்டில் அத்லெட்டிகோ மட்ரிட் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .