2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பார்சிலோனா, றியல் மட்ரிட் வென்றன

Editorial   / 2018 மார்ச் 19 , பி.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் பார்சிலோனா, றியல் மட்ரிட் ஆகிய அணிகள் வென்றுள்ளதுடன், அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றுள்ளது.

தமது மைதானத்தில் நடைபெற்ற அத்லெட்டிக் பில்பாபோவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக பக்லோ அல்கேஸர், லியனல் மெஸ்ஸி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 6-3 என்ற கோல் கணக்கில் ஜிரோனாவை றியல் மட்ரிட் வென்றது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு கோல்களையும் லூகாஸ் வஸ்கூஸ் கரித் பேல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஜிரோனா சார்பாக கிறிஸ்திய ஸ்டுவனி இரண்டு கோல்களையும் ஜுவன்பே ஒரு கோலையும் பெற்றனர்.

இந்நிலையில், வில்லாறியலின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோல்வியடைந்தது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அந்தோனி கிறீஸ்மன் பெற்றதோடு, வில்லாறியல் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் எனெஸ் உனால் பெற்றார்.

இப்போட்டிகளின் முடிவில், லா லிகா புள்ளிகள் பட்டியலில் 75 புள்ளிகளுடன் பார்சிலோனா முதலிடத்திலுள்ளதுடன், 64 புள்ளிகளுடன் அத்லெட்டிகோ மட்ரிட் இரண்டாமிடத்திலுள்ளதுடன், 60 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் றியல் மட்ரிட் உள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .