2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடர்: அரையிறுதியில் நடால், பெடரர், கொன்டா

Editorial   / 2019 ஜூன் 05 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, உலகின் இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால், உலகின் மூன்றாம் நிலை வீரரான ரொஜர் பெடரர், பிரித்தானியாவின் ஜொஹன்னா கொன்டா ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.

நேற்று  இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், உலகின் ஏழாம் நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரியை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனான ரபேல் நடால், ஒரு மணித்தியாலமும் 51 நிமிடங்களும் நீடித்த போட்டியில் 6-1, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்று  இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், சக சுவிற்ஸர்லாந்து வீரரான ஸ்டான் வவ்றிங்காவை எதிர்கொண்ட சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், மூன்று மணித்தியாலங்கள் 17 நிமிடங்கள் வரை நீடித்த போட்டியில் 7-6 (7-4), 4-6, 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

அந்தவகையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், ஸ்பெய்னின் ரபேல் நடாலை ரொஜர் பெடரர் எதிர்கொள்கின்றார்.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீவன்ஸை எதிர்கொண்ட ஜொஹன்னா கொன்டா, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்று  இடம்பெற்ற மற்றைய காலிறுதிப் போட்டியில் குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சை எதிர்கொண்ட செக் குடியரசின் மார்கெட்டா வொன்ட்ரெளசோவா, 7-6 (7-1), 7-5 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

அந்தவகையில், நாளை  இடம்பெறுகின்ற அரையிறுதிப் போட்டியில் மார்கெட்டா வொன்ட்ரெளசோவாவை ஜொஹன்னா கொன்டா எதிர்கொள்கின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .