2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

முதலிரண்டு டெஸ்ட்களில் இஷாந்த், ரோஹித் இல்லை

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 24 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இஷாந்த் ஷர்மாவும், ரோஹித் ஷர்மாவும் பங்கேற்க முடியாமல் போயுள்ளதுடன், இறுதி இரண்டு டெஸ்ட்களிலும் பங்கேற்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முடிவிலேயே தங்கியுள்ளது.

மூன்றாவது டெஸ்டில் இஷாந்த் பங்கேற்பதற்கு நான்கு வார பணிச்சுமையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், உடனடியாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டும். ஏனெனில், 14 நாள்கள் கடுமையான தனிமைப்படுத்தல் விதியை அவுஸ்திரேலியாவில் முகங்கொண்ட பின்னர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் ஏழாம் திகதி ஆரம்பிக்கவுள்ள மூன்றாவது டெஸ்டிலேயே இஷாந்த் விளையாட முடியும்.

இந்நிலையில், ரோஹித் இன்னும் முழுமையான உடற்றகுதியைப் பெறவில்லை என அறியப்படுவதோடு, அவர் அடுத்த மாத இரண்டாவது வாரத்திலேயே அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற முடியும் என்பதோடு, அதற்கு மேலதிகமாக இரண்டு வாரங்கள் அவருக்குத் தேவை எனக் கூறப்படுகிறது.  ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஏனைய குழாமோடு நேரடியாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தால் டெஸ்ட் தொடரில் விளையாடும் மேம்பட்ட வாய்ப்பை ரோஹித் கொண்டிருந்திருப்பார் என இந்திய கிரிக்கெட் சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X