2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மற்றுமொரு தலைமைப் பதவியை இழந்தார் ஸ்மித்

Editorial   / 2018 மார்ச் 26 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்த வருடத்திற்கான இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக அஜின்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயற்பட்ட ஸடீவ் ஸ்மித் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும் தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் அவர் சிக்கி அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பொறுப்பை இழந்தார்.

இந்த நிலையில் அவர் ஐபில் தொடரில் பங்கேற்பதே சந்தேகத்திற்குரிய விடயமாக மாறியுள்ள நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்வாகம் தலைமைப் பதவியிலிருந்து அவரை நீக்கியுள்ளது.

இரண்டு வருட போட்டித் தடையை எதிர்நோக்கியிருந்த ராஜஸ்தான் றோயல்ஸ், இந்த வருடமே ஐ.பி.எல் போட்டிகளுக்கு திரும்பியிருக்கின்ற நிலையில் ராஜஸ்தான் அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X