2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீண்டும் வருகிறார் செரினா வில்லியம்ஸ்

Editorial   / 2017 டிசெம்பர் 25 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்னிஸ் பகிரங்கத் தொடர் வரலாற்றில் அதிக தனிநபர் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களாக 23 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைக் கொண்டுள்ள ஐக்கிய ஐமெரிக்க வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் குழந்தையைப் பெற்றெடுத்து நான்கு மாதங்களில் போட்டிகளுக்கு திரும்பவுள்ளார்.

உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள கண்காட்சிப் போட்டியொன்றில் உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான லத்தீவியாவின் ஜெலினா ஒஸ்டபென்கோவை எதிர்கொள்ளவுள்ளார்.

இவ்வாண்டு ஜனவரில் அவுஸ்திரேலிய் பகிரங்கத் தொடரில், எட்டு வார கர்ப்பத்துடன் சம்பியான பின், 36 வயதான செரினா வில்லியம்ஸ் எந்தவொரு போட்டிகளிலும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .