2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மெர்சிடீஸ் கிண்ணத்தை வென்றார் பெடரர்

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியின் ஸ்டட்கார்ட்டில் இடம்பெற்றுவந்த மெர்சிடீஸ் கிண்ணத் தொடரில், தற்போதைய உலகின் முதல்நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் சம்பியனானார்.

20 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் சம்பியனான ரொஜர் பெடரர், குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், 6-4, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் றாவோனிச்சை வென்று சம்பியனானார்.

இந்நிலையில், இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் தரவரிசையில் முதலிடத்தை உறுதிப்படுத்திய 36 வயதான ரொஜர் பெடரர், நேற்று வெளியிடப்பட்ட தரவரிசையில், முதலிடத்திலிருந்த ஸ்பெய்னின் நடாலை பின்தள்ளி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .