Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 01 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 3-1 என்ற ரீதியில் கைப்பற்றியது.
இத்தொடரில் 2-1 என ஏற்கெனவே முன்னிலை பெற்றிருந்த இந்தியா, திருவனந்தபுரத்தில் இன்று இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில் வென்றதைத் தொடர்ந்தே 3-1 என தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியில்,முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 31.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில், ஜேசன் ஹோல்டர் 25 (33), மார்லன் சாமுவேல்ஸ் 24 (38), றொவ்மன் பவல் 16 (39) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இரவீந்திர ஜடேஜா 4, ஜஸ்பிரிட் பும்ரா, கலீல் அஹமட் ஆகியோர் தலா 2, புவ்னேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 105 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, 14.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து 35.1 ஓவர்கள் மீதமிருக்கையில் 9 விக்கெட்டுகளால் வென்றது. துடுப்பாட்டத்தில், ரோகித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 63 (56), விராத் கோலி 33 (29) ஓட்டங்களைப் பெற்றனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை ஒஷானே தோமஸ் வீழ்த்தினார்.
இப்போட்டியின் நாயகனாக இரவீந்திர ஜடேஜாவும் தொடரின் நாயகனாக விராத் கோலியும் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago