2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லும் இலங்கை

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 17 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகள், மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு டெஸ்ட்களை உள்ளடக்கிய சுற்றுப்பயணத்துக்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மேற்கிந்தியத் தீவுகளுக்கு இலங்கை பயணமாகின்றது.

அன்டிகுவாவில் இரசிகர்களில்லாமல் பாதுகாப்புடன் நடைபெறவுள்ள இச்சுற்றுப்பயணத்தின் முதலாவது போட்டியான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது அடுத்த மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகின்றது.

இச்சுற்றுப்பயணத்தின் பகுதியொன்றை சென். லூசியாவில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை நடத்தத் திட்டமிட்டிருந்தபோதும், இலங்கை தாமதமாகச் செல்வதாலும், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 போட்டியான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) ஆரம்பிப்பதற்கு முன்பாக சுற்றுப்பயணத்தை முடிக்க வேண்டியிருப்பதால் அது சாத்தியமில்லாமல் போயிருந்தது.

இலங்கையின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், லஹிரு திரிமான்ன ஆகியோர் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையிலேயே இலங்கை மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்வது தாமதமாகியிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .