2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்தது பாகிஸ்தான்

Editorial   / 2018 ஏப்ரல் 04 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரில், 3-0 என்ற ரீதியில் மேற்கிந்தியத் தீவுகளை பாகிஸ்தான் வெள்ளையடித்தது.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்றிருந்த பாகிஸ்தான், கராச்சியில் நேற்று  இடம்பெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என்ற ரீதியில் மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அன்ட்றே பிளட்சர் 52 (43), டினேஷ் ராம்டீன் ஆட்டமிழக்காமல் 42 (18), மார்லன் சாமுவேல்ஸ் 31 (25) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஷடாப் கான் 2, மொஹமட் நவாஸ், பாஹீம் அஷ்ரப், உஸ்மான் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 154 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், பாபர் அஸாம் 51 (40), பக்கர் ஸமன் 40 (17), ஹுஸைன் தலாட் ஆட்டமிழக்காமல் 31 (28), ஆசிப் அலி ஆட்டமிழக்காமல் 25 (16) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், றயாட் எம்ரிட், ஒடேன் ஸ்மித் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக பக்கர் ஸமன் தெரிவாகியதோடு, தொடரின் நாயகனாக பாபர் அஸாம் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .