2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகள்: சமநிலையில் குரோஷியா – வேல்ஸ் போட்டி

Editorial   / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கான தம்மண்ணில் இன்று அதிகாலை நடைபெற்ற குரோஷியாவுடனான குழு ஈ தகுதிகாண் போட்டி ஒன்றை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் வேல்ஸ் முடித்துக் கொண்டது.

குரோஷியா சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கொலா விளாசிச் பெற்றிருந்த நிலையில், வேல்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கரெத் பேல் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தம்மண்ணில் இன்று அதிகாலை நடைபெற்ற வட மசிடோனியாவுடனான குழு ஜி போட்டியொன்றை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற போலந்து, அடுத்தாண்டு இடம்பெறவுள்ள யூரோ கிண்ணத் தொடருக்கு இரண்டு போட்டிகள் இருக்கையிலேயே தகுதிபெற்றுக் கொண்டது. போலந்து சார்பாக, பிரஸ்ஸம்ஸ்லாவ் ஃபிராக்ஸ்கி, அர்க்கடியுஸ் மிலிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, எஸ்தோனியாவில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு சி போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வென்றது. ஜேர்மனி சார்பாக, இல்கி குன்டோகன் இரண்டு கோல்களையும், திமோ வேர்னர் ஒரு கோலையும் பெற்றனர்.

இந்நிலையில், சைப்ரஸில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஐ போட்டியொன்றில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்ற ரஷ்யா, யூரோ கிண்ணத் தொடருக்கு தகுதிபெற்றுக் கொண்டது. ரஷ்யா சார்பாக, டெனிஸ் ஷெர்ஷேவ் இரண்டு கோல்களையும், மகொமெட் ஒஸ்டொயொவ், ஆர்டெம் ஸூபா, அலெக்ஸான்டர் கொலோவின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, பெலாரஸில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு சி போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றிருந்தது. நெதர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஜோர்ஜினோ விஜ்னால்டும் பெற்றிருந்தார். பெலாரஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஸ்டனிஸ்லோவ் ட்ரஹுன் பெற்றிருந்தார்.

இந்நிலையில், கஸக்ஸ்தானில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஐ போட்டியொன்றில் ஏற்கெனவே யூரோ கிண்ணத் தொடருக்கு தகுதிபெற்றுள்ள பெல்ஜியம் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. பெல்ஜியம் சார்பாக, மிச்சி பச்சுவாய், தோமஸ் மெனியுயர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .