2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

றியல் மட்ரிட், பார்சிலோனா தோற்றன

Editorial   / 2018 செப்டெம்பர் 28 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், றியல் மட்ரிட், பார்சிலோனா அணிகள் தோற்றுள்ளன.

செவில்லா அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியிலேயே றியல் மட்ரிட் தோற்றிருந்தது.

இப்போட்டியின் 17ஆவது நிமிடத்தில், சக வீரர் ஜெஸூஸ் நவாஸிடமிருந்து வந்த பந்தைக் கோலாக்கிய செவில்லாவின் அன்ட்ரே சில்வா தனது அணிக்கு ஆரம்பத்திலேயே முன்னிலயை வழங்கியதோடு, அடுத்த நான்காவது நிமிடத்தில் ஜெஸூஸ் நவாஸ் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த உதையொன்று மீண்டும் வர அதைக் கோலாக்கி முன்னிலையை இரட்டிப்பாக்கியிருந்தார்.

இதன்பின்னர், றியல் மட்ரிட்டின் கரித் பேல், செவில்லாவின் பிராங்கோ வஸ்கூஸ் ஆகியோர் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த உதைகள் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பிய நிலையில், போட்டியின் 39ஆவது நிமிடத்தில் தமதணியின் விஸாம் பென் யெடர் பெற்ற கோலுடன் இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் செவில்லா வென்று கொண்டது.

அந்தவகையில், இப்போட்டியில் கோல் கம்பத்தை நோக்கி 21 உதைகளை றியல் மட்ரிட் கொண்டிருந்தபோதும் கரித் பேல் சிறந்த தாக்குதல் வீரராக இருந்தார். எனினும் அவரும் சில கோல் பெறும் நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டதோடு, காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பின்ப் உதவியுடன் லூகா மோட்ரிட்ச் பெற்ற கோலொன்று ஓவ் சைட் எனக் கணிக்கப்பட்ட நிலையில், இப்பருவகாலத்தில் முதலாவது தோல்வியை றியல் மட்ரிட் அடைந்தது.

இதேவேளை, லெகனிஸ் அணியின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் பார்சிலோனா தோல்வியடைந்திருந்தது.

குறித்த போட்டியின் 12ஆவது நிமிடத்தில் பிலிப் கோச்சினியோ பெற்ற கோலின் மூலம் பார்சிலோனா முன்னிலை பெற்றிருந்தாலும் இரண்டாவது பாதியில் 68 செக்கன்கள் இடைவெளியில் லெகனஸின் நபில் எல் ஸார், ஒஸ்கர் றொட்றிகஸ் ஆகியோர் பெற்ற கோல்களின் மூலமாக இறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதில், ஒஸ்கார் றொட்றிகாஸ் பெற்ற கோலில், பார்சிலோனாவின் பின்கள வீரரான ஜெராட் பிகேயே அவரிடம் தவறுதலாக பந்தை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X