2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘வில்லியர்ஸின் முடிவால் அதிர்ச்சி’

Editorial   / 2018 மே 30 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் ஏபி டி வில்லியர்ஸ், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளமை அதிர்ச்சியளிப்பதாக, அவ்வணியின் பயிற்றுநர் ஒட்டிஸ் கிப்ஸன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அத்தோடு, உலகக் கிண்ணப் போட்டிகளை வெற்றிகொள்ளத் தடுமாறும் அணியான தென்னாபிரிக்கா, அடுத்தாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் வாய்ப்புகளுக்கும், அம்முடிவு பேரிடியாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஓய்வு தொடர்பாக, அவருடன் ஏற்கெனவே கலந்துரையாடிய போதிலும், அவரது மனதை மாற்ற முடியாமல் போய்விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .