2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீரர்கள் சபையில் குமார் சங்கக்காரா

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் சம்மேளனத்தால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வீரர்கள் சபையில், இலங்கையணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார இடம்பெற்றுள்ளார்.

குமார் சங்கக்கார தவிர, தென்னாபிரிக்காவின் முன்னாள் தலைவரான கிறேமி ஸ்மித், இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி ஹீதர் நைட், நியூசிலாந்தின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் றொஸ் டெய்லர், அவுஸ்திரேலியாவின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ஆரோன் பின்ஞ், தென்னாபிரிக்காவின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ஜெ.பி டுமினி ஆகியோரும் வீரர்கள் சபையில் இடம்பெற்றுள்ளதுடன், துணை அங்கத்துவ நாடுகளை, அயர்லாந்து அணியின் தலைவர் வில்லியம் போர்ட்டர்பீல்ட், ஸ்கொட்லாந்து அணியின் தலைவர் கைல் கொயட்ஸியர் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .