2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வென்றார் பெடரர்

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத் தலைநகர் இலண்டனில் இடம்பெற்றுவரும் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற உலகின் எட்டாம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தியெமுடனான போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ரொஜர் பெடரர் வென்றார்.

ஒஸ்திரியாவின் தியெமை, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் வென்றிருந்தார்.

இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற உலகின் ஒன்பதாம் நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரியுடனான போட்டியில், 6-0, 6-1 என்ற நேர் செட்களில், உலகின் ஆறாம் நிலை வீரரான தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சன் வென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X