2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெளியேறினார் நடப்புச் சம்பியன் ஒஸ்டபென்கோ

Editorial   / 2018 மே 28 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடர் நேற்று ஆரம்பித்த நிலையில், முதல் நாளிலேயே அதிர்ச்சியாக நடப்புச் சம்பியனும் உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையுமான ஜெலீனா ஒஸ்டபென்கோ முதலாவது சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தனது முதலாவது சுற்றில், உக்ரேனின் கட்டரினா கொஸ்லோவாவிடன் 5-7, 3-6 என்ற நேர் செட்களில் தோற்ற இலத்தீவியாவின் ஜெலீனா ஒஸ்டபென்கோ தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதேவேளை, உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 4-6, 5-7 என்ற நேர் செட்களில் சீனாவின் வான் குயிங்கிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .