2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளியேற்றப்பட்ட குவித்தோவா, அன்றீச்சு

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான பெற்ரா குவித்தோவா, ஒன்பதாம் நிலை வீராங்கனையான பியங்கா அன்றீச்சு ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் சொரோனா கிறிஸ்டியாவை எதிர்கொண்ட செக் குடியரசின் குவித்தோவா, 4-6, 6-1, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் தாய்வானின் ஸெய் சு-வெய்யை எதிர்கொண்டா கனடாவின் அன்றீச்சு, 3-6, 2-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .