2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெளியேற்றப்பட்டார் தியெம்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் மூன்றாம்நிலை வீரரான டொமினிச் தியெம் வெளியேற்றப்பட்டார்.

இன்று நடைபெற்ற பல்கேரியாவின் கிறிகர் டிமிட்றோவ்வுடனான நான்காவது சுற்றுப் போட்டியில், 4-6, 4-6, 0-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தே ஒஸ்திரியாவின் தியெம் தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், தனது நான்காவது சுற்றுப் போட்டியில், உலகின் ஏழாம்நிலை வீராங்கனையான பெலாரஸின் அர்ய்னா சபலெங்காவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .