2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெளியேற்றப்பட்டார் பார்டி

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் முதல்நிலை வீராங்கனையான அஷ்லெய் பார்ட்டி வெளியேற்றப்பட்டார்.

இன்று நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில், செக் குடியரசின் கரோலினா முஷோவாவை எதிர்கொண்ட அவுஸ்திரேலியாவின் பார்ட்டி, 6-1, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, சக ஐக்கிய அமெரிக்க வீராங்கனையான ஜெஸிக்கா பெகுலாவை தனது காலிறுதிப் போட்டியில் எதிர்கொண்ட ஜெனிஃபர் பிராடி, 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், உலகின் எட்டாம்நிலை வீரரான சக ரஷ்யரான அன்ட்ரே ருப்லெவ்வை தனது காலிறுதிப் போட்டியில் எதிர்கொண்ட நான்காம்நிலை வீரரான டனில் மெட்வெடெவ், 7-5, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .