2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹைதராபாத் அணியிலிருந்து பதவி விலகினார் வார்னர்

Editorial   / 2018 மார்ச் 28 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

11 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

இப் போட்டியில் ஹைதராபாத் அணியின் தலைவராக அவுஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் செயற்பட்டு வந்தார்.

தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் பொட்டித் தொடரில் அவுஸ்ரேலியா அணி பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித், வார்னர் ஆகிய இருவருக்கும் ஒரு வருட போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு முதல் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த வார்னர் இன்று (28) அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .