2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

155 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் கையளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு பழையஊர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஆளுகைக்குட்பட்ட 155 குடும்பங்களுக்கு, உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன.

சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியனிடம்,  செங்கலடி கோலட் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், மேற்படி குடும்பங்களுக்கு, உலருணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பழையஊர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் நாகராசா லோகிதராசா தலைமையில்,  பழையஊர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் தலைவர் தி.சுதேஸ்கரன், பல்நோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர் பா.கஜேந்திரன் ஆகியோரின் நெறிப்படுத்தலில், உலருணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .