2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அகதிகளுக்கு உதவும் பொருட்டு பங்களாதேஷ பயணம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள மியான்மார் ரோகிஞ்சா முஸ்லிம் அகதிகளுக்கு உதவும் பொருட்டு, மட்டக்களப்பிலிருந்து அல் கிம்மா பிரதி நிதிகள், செவ்வாய்க்கிழமை இரவு பங்களாதேஷ் சென்றுள்ளனர்.

அல்கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளருமான மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் தலைமையிலான குழுவினரே பங்களாதேஷ் சென்றுள்ளனர்.

மியான்மார் ரோகிஞ்சா முஸ்லிம் அகதிகளுக்காக, இவர்களால் சேகரிக்கப்பட்ட நிதியை, அந்த மக்களிடம் நேரடியாக கையளித்து, அவர்களுக்கு இதன்போது உதவ உள்ளதாகவும் அல்கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளருமான மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .