2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அபிவிருத்திக்குழு கூட்டம்

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (12) காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைப்பெற்றது.

 இதன் போது இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை விரைவில் நிறைவு செய்யுமாறும்  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆலோசனை வழங்கினார்.

 காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் இவ்வாண்டு 247 திட்டங்கள் 542 மில்லியன் ரூபா செலவில் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் 142 திட்டங்கள் இதுவரை முடிவடைந்மதுள்ளதாகவும், காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .