2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அம்பியூலன்ஸ் வண்டி வழங்கிவைப்பு

Editorial   / 2019 மே 19 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு, அம்பியூலன்ஸ் வண்டியொன்று, நேற்று  (18)  வழங்கி வைக்கப்பட்டது. 

வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம். ஜலாதீன் தலைமையில் நடைபெற்ற  இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.பைஸல் காஸிம் கலந்துகொண்டு,  அம்பியூலன்ஸ் வண்டியை வைத்திய அதிகாரியிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ. நபீர், மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.ஆர். லக்ஸயன், என். சாதனா, உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .