2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அரசியல்வாதியின் வீட்டில் கமெராக்கள் திருட்டு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஜனவரி 07 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கல்லடிப் பகுதியிலுள்ள தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெராக்கள் 2 இனந்தெரியாத நபரால் திருடப்பட்டதோடு, மேலுமொரு கமெரா சேதமாக்கப்பட்டுள்ளதாக, அரசியல்வாதியொருவர், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இச்சம்பவம், லோஜினி மகேந்திரா என்பவரின் வீட்டில் இன்று (07) அதிகாலை  3.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சேதமாக்கப்பட்ட கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளை அவதானித்த போது, குற்றச்செயல் புரிந்தவரின் நடமாட்டமும் தோற்றமும்  தெரிவதாகத் தெரிவதாகவும் அவர் தனது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .