2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அழுகிய மரக்கறிகள் சந்தையில் மீட்பு

பேரின்பராஜா சபேஷ்   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, சித்தாண்டி வாரந்த சந்தையில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த அழுகிய ஒரு தொகுதி மரக்கறிகளை, இன்று (07) கைப்பற்றியுள்ளதாக, சித்தாண்டி பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சி.சிவகாந்தன் தெரிவித்தார்.

இதன்போது, கோவா 30 கிலோகிராமும் கரட் 50 கிலோகிராமும், கத்தரிக்காய் 15 கிலோகிராமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாவனையாளர்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து, வாரந்த சந்தை நடைபெறும் பகுதியை பரிசோதகர்களான சி.சிவகாந்தன், அ.ராஜ்குமார் ஆகியோர் நடத்திய சுற்றிவளைத்த போது, இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மரக்கறிகளை, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் நாளை (08) பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .