2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு

Editorial   / 2018 பெப்ரவரி 23 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளில் மேலும் ஒரு தொகுதியினர் ஆசிரியர் சேவைகளுக்குள் உள்வாங்கப்படவுள்ளனர் என,  கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 385 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி வழங்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் உள்ள 322 பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X