2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டமாவடி, பாலத்துக்கு அருகில் இனந்தெரியாத ஆணின் சடலமொன்று, இன்று (07) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதென, வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதென, வாழைச்சேனைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த நபர், 55 - 60 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார், குறித்த நபரை யாரும் கொலை செய்து ஆற்றில் வீசினார்களா அல்லது அவரே தனது உயிரைப் மாய்த்துக் கொண்டாரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .