2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆரம்பப் பாடசாலைக்கு நுழைதலை இலகுபடுத்தும் செயற்றிட்டம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 மார்ச் 26 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில், ஆரம்பப் பாடசாலைக்கு முன்பள்ளி மாணவர்கள் நுழைதலை இலகுபடுத்தல் தொடர்பான தெளிவுபடுத்தும் பரீட்சார்த்த செயற்றிட்டம், மட்டக்களப்பு புனித திரேசா மகளிர் பாடசாலையில், இன்று (26) நடைபெற்றது.

இச்செயற்றிட்டத்தின் போது, முன்பள்ளி ஆசிரியர்கள், ஆரம்பப் பிரிவுப் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருக்குத் தெளிவுபடுத்தப்பட்டன.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் ஏற்பாட்டில்,  மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளப் பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வி.முரளிதரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், பிரதம அதிதியாக உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ்வரன்  கலந்துகொண்டார்.

இந்தச் செயற்றிட்டத்தின் ஊடாக, ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் முன்பள்ளியில் இருந்து எதிர்பார்ப்பது எவ்வாறான பிள்ளைகள்,  ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களிடமிருந்து பெற்றோர் எதிர்பார்ப்பது எவ்வகையான பிள்ளைகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து விரிவுரைகள் நடைபெற்றதுடன், குழுச் செயல்பாடுகளும்  நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .