2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரு திணைக்களங்களுக்கு விருது

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

2018ஆம் ஆண்டுக்கான உற்பத்தித் திறன் போட்டியில், மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகம் 3ஆம் இடத்துக்கான விருதைப் பெற்றுள்ளதுடன், அதே பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையும் 3ஆம் இடத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. 

இப்போட்டியை, இலங்கை தேசிய உற்பத்தித் திறன் செயலகம் நடத்தியது.

மேற்படி செயலகம், 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற உற்பத்தித் திறன் போட்டியில் பாராட்டைப் பெற்றிருந்ததோடு, மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை 2015ஆம் ஆண்டும் 3ஆம் இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .