2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இளைஞர்கள் நையப்புடைப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், நடராஜன் ஹரன்

கொக்கட்டிச்சோலை கிராமத்தில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனரென, கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (17) இடம்பெற்ற இச்சம்பவம்பற்றி தெரியவருவதாவது:

கொக்கட்டிச்சோலை கிராமத்திலுள்ள பெண்ணொருவரின் கடைக்குச் சென்ற இளைஞர்கள் இருவர், அங்கு பொருட்கள் கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து, கடைக்காரப் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

அவ்வேளையில் பெண்ணில் கூச்சல் சத்தம் கேட்டு வீதியால் சென்றோரும் அயலவர்களும் வீதிக்கு ஓடிவந்து, தப்பிச் செல்லும் இளைஞர்களைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்து வந்து நையப்புடைத்ததுடன், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X