2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உபகரணங்களை வாடகைக்கு பெற்றவர் தலைமறைவு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 30 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர், ஓட்டமாவடிப் பிரதேசங்களில் கட்டட நிர்மாண உபகரணங்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்களிடமிருந்து, பல இலட்ச ரூபாய் பெறுமதியான கட்டட நிர்மாண உபகரணங்களை வாடகைக்குப் பெற்றுக் கொண்டவர் தலைமறைவாகியுள்ளாரென, ஏறாவூர், வாழைச்சேனைப் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சந்தேகநபரால், வாடகைக்குப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள உபகரணங்கள், பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் மீளக் கையளிக்கப்படவில்லை என்றும் அப்பொருட்களை, சந்தேகநபர் வேறு பகுதிகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X